"விஜய் அரசியலுக்கு வராமல் தட்டிவைக்கவே வருமான வரி சோதனை" - சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
x
சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர்கள் வசந்தபாலன், சீனுராமசாமி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் நோக்கமே அவரை அரசியலுக்கு வராமல் தட்டிவைப்பதற்கான முயற்சி தான் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்