முதுமலை சரணாலயத்தில் கடும் வறட்சி : சாலையின் இருபுறமும் தீ தடுப்பு கூடுகள் அமைப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி - மைசூர் சாலை, மசினகுடி, தெப்பக்காடு, பொக்காபுரம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும், இந்த தீ தடுப்பு கூடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சுற்றுலா பயணிகள் காட்டு தீ ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
Next Story

