நெல் கொள்முதல் செய்வதற்கான சர்வரில் கோளாறு : அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் முடங்கின

மயிலாடுதுறை சர்வர் கோளாறு ஏற்பட்டதால், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் முடங்கின.
நெல் கொள்முதல் செய்வதற்கான சர்வரில் கோளாறு : அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் முடங்கின
x
மயிலாடுதுறை சர்வர் கோளாறு ஏற்பட்டதால், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் முடங்கின. நெல் விற்பனை செய்வதற்கு விவசாயி நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் எண், வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றின் நகலை கொடுத்து, ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நேற்று திடீரென்று, நெல் கொள்முதல் செய்வதற்கான சர்வரில்  கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் நெல் கொள்முதல் செய்ய முடியாததால், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. சர்வரை சரி செய்து நெல் எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்