ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு : வரும் 25ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை 25-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை 25-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Next Story