"கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி"
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 21 வயது பெண்ணை, கடந்த 2018 -ல் முதலாளி உள்ளிட்ட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
* இதுகுறித்த புகாரில், வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்க வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அந்தப் பெண்ணின் தாயார் கடிதம் எழுதினார்.
* அதன் பேரில் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 5 லட்சம் ரூபாயும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. ஆனால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
* ஏற்கனவே மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்திரசூட், கே.எம்.ஜோசப் அமர்வு, முன்னுதாரண உத்தரவு நகல்களை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.
* இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் வழங்கலாம் என்றும், அதுகுறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தது.
Next Story