பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.17 லட்சம் கொள்ளை என புகார் - கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

செங்கல்பட்டு அருகே உள்ளே பரனூர் சுங்கச்சாவடியில் 17 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
x
கடந்த சனிக்கிழமை இரவு செங்கல்பட்டு அருகே உள்ளே பரனூர் சுங்கச்சாவடியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் -  சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலை பயன்படுத்தி,  சுங்கச்சாவடி அலுவலகத்தில் புகுந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்த 17 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச்சென்றார். இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடுத்த புகாரைத்தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீஸ், கொள்ளையர் பணத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். சுங்கச் சாவடிக்குள் மர்ம நபர் எப்படி நுழைந்தார் என விசாரணை நடத்தும் போலீஸ், மற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக மேலும் பல சிசிடிவி காட்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்