டெல்டா மாவட்டங்களில் தி.மு.க ஆர்ப்பாட்டம்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, டெல்டா மாவட்டங்களில் தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் தி.மு.க ஆர்ப்பாட்டம்...
x
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தி.மு.க எம்.பி. எஸ்.எஸ். பழனி மாணிக்கம், அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வேளாண் அமைப்புகள், இதில் பங்கேற்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை  திரும்பப் பெற வேண்டும்,  காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்