குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
குருமூர்த்தி வீட்டில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மணிகண்டன் இது  தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு வீச முயற்சித்த  மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள் . அங்குள்ள  சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களையும் போலீசார்  ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை  அடுத்து  குருமூர்த்தியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்