"பட்ட பகலில் ஆளில்லா வீடுகளில் திருடிய பெண்கள் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் போலீசார்"

ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்
பட்ட பகலில் ஆளில்லா வீடுகளில் திருடிய பெண்கள் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் போலீசார்
x
திண்டிவனம் அருகே, வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்களை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு செய்யூர் குளக்கரையைச் சேர்ந்த கல்பனா என்பது தெரியவந்தது.  அவருடன் வந்த பெருங்களத்தூர் முத்தலாண்டி தெருவைச் சேர்ந்த லட்சுமியையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் நகைகளை மீட்ட போலீசார், 33 திருட்டு புகாரில் தொடர்புடையவர்கள் என தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்