கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தல்
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முந்தைய கூட்டங்களில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததாக குற்றம்சாட்டிய அவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்