நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு
x
பெரியார் பற்றிய பொய்யான தகவலை ரஜினி பரப்பி வருவதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் பேசியுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்