பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் : உருவ படத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர்

நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் : உருவ படத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர்
x
நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. பி.எச் பாண்டியன் கடந்த ஜனவரி 4ஆம் தேதி உடல் நலகுறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அதிமுக சார்பில் இந்த நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பி.எச்.பாண்டியனின் உருவ படத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்