உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு

வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு
x
சிறப்பு நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன் முறையிடப்பட்டது. இதை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி சுந்தர் முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.இதையடுத்து, தங்கள் மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் நீதிபதி சுந்தர் முன் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்