கால்களில் கத்தி கட்டி சண்டையிட்ட சேவல்கள் - நீதிமன்ற நிபந்தனையை மீறி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 22 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.
கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 22 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் நீதிமன்ற நிபந்தனைக்கு உட்படாமல் சேவல்களின் கால்களில் கத்திகளை கட்டி, சேவல் சண்டை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேவல் தாக்கியதில், கடந்த 3 நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன்,
6 பேர் பலத்த காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரவக்குறிச்சி தாசில்தார், உத்தரவின் பேரில் சேவல் சண்டை நடத்திய 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story