சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
x
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்களை விசாரணைக்கு எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்