சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

காதல் தகராறில் கொலை செய்துவிட்டு, சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்து, பொங்கல் கொண்டாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி கைது
x
நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை சேர்ந்த பெயின்ட்ரான விக்னேஷ், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தன் அண்ணனான தறி தொழிலாளி விக்னேஷிடம் இதை கூறியுள்ளார். இதனையடுத்து, அண்ணன் விக்னேஷ், பெயின்டரை, மது குடிக்க அழைத்து சென்று, காட்டு பகுதிக்குள் வைத்து பெயின்டர் விக்னேஷை கொலை செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார். இது குறித்து, இளம் பெண்ணின், அண்ணன்  விக்னேஷை தேடி வந்த போலீசார், சேலம் கன்னங்குறிச்சியில், உறவினர் வீட்டில் பொங்கல் கொண்டாடி கொண்டிருந்த நிலையில் விக்னேஷை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்