திருவள்ளூவர் தினம் : தமிழக அரசு சார்பில் விருதுகள் அறிவிப்பு

திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள விருதுகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூவர் தினம் : தமிழக அரசு சார்பில் விருதுகள் அறிவிப்பு
x
திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள விருதுகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அரசாணையில், 2020 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது ந. நித்தியானந்த பாரதிக்கும், 2019 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது முனைவர் கோ. சமரசத்திற்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல் 2019 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் மா.சு.மதிவாணனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ப.சிவாஜிக்கும் வழங்கப்பட உள்ளது. 

பாவேந்தர் பாரதிதாசன் விருது தேனிசை செல்லப்பாவிற்கும், தமிழ்தென்றல் திரு.வி.க விருது முனைவர் கோ. சுந்தரராசனுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது மருத்துவர் மணிமேகலை கண்ணன் என்பவருக்கும் வழங்கப்பட உள்ளது. விருதுகளை பெறும் விருதாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய், ஒரு சவரன் தங்கம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்