குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
x
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்தும் திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரி அண்ணாசலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கும் வகையில் கையில் பதாகைகள் வைத்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்