வாழைத்தார் விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாழைத்தார் விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சந்தையில், வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனை ஆகியதாக தெரிவித்துள்ள விவசாயிகள், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி மகிழ்ச்சியடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்