சென்னை துறைமுகம் வந்தது ஜப்பான் ரோந்து கப்பல் : இந்திய-ஜப்பான் கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது.
x
ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது. சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த எசிகோ கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எசிகோ கப்பலில் சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர், இந்திய வீரர்களுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளின் கடலோர காவல் படையினரிடையே நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்