தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா - விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு

விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
x
சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில்  நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். தனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள் தான் தன்னுடைய முதல் கடவுள் என்று கூறிய விஜயகாந்த், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்