திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது : ரூ.11.54 லட்சம் - வெளிநாட்டு பணம்,தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 11 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது : ரூ.11.54 லட்சம் - வெளிநாட்டு பணம்,தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில் 11 லட்சத்து  54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தாமரை செல்வன் என்பவரிடம் இருந்து 4 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்ட்கோ விமானத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பணம் 7 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்