கடலில் மாயமான மீனவர் : ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்க கோரிக்கை
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார். அவர் தொடர்ந்து தேடப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாகியும், மாயமான அவரை கண்டுபிடிக்க முடியாதவில்லை. இந்நிலையில், சேகரின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமாக கடலோர காவல் படையினர் தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென சேகரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story