போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று டிக் டாக் வீடியோ : சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை

தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று டிக் டாக் செய்த இளைஞர்கள் 3 பேருக்கு போக்குவரத்தை சரி செய்யும் பணி அளிக்கப்பட்டது
போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று டிக் டாக் வீடியோ : சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை
x
தூத்துக்குடி லெவஞ்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கோகில கிருஷ்ணன், சேகுவேர, சீனு ஆகிய 3 இளைஞர்கள் மில்லர்புரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று டிக் டாக் வீடியோ வெளியிட்டனர். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அவர்கள் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக ஒருநாள் முழுவதும் காய்கறி மார்க்கெட்டில் நின்று போக்குவரத்தை சரிசெய்யுமாறு மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் காலை முதல் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்