இரவோடு இரவாக திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை

மன்னார்குடியில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை
x
மன்னார்குடியில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில், எம்.ஜி.ஆர் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. சிலையை உடனடியாக திறக்க கோரி கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடாமல் போஸ்டர் ஒன்றும் அங்கு ஒட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு லாரி ஒன்றில் வந்த மர்ம நபர்கள், எம்.ஜி.ஆர் சிலை அருகே  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை  நிறுவியதுடன், 2 சிலைகளுக்கும் மாலை அணிவித்து சென்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய சிலைகள் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்ததாகவும், இதனாலேயே அவசர அவசரமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திறக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்