இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன், தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவங்குகிறது.
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
x
தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உரையாற்றுகிறார். உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. முதலில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அப்போது, அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் நேற்று முன்நாள் நேரில் சந்தித்து, பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்