குழந்தைகள் ஆபாச படம் விவகாரம் : சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியவர் கைது

சிறார் பாலியல் வன்புணர்வு படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றியதற்காக, கோவை பொள்ளாச்சியில், அசாம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் ஆபாச படம் விவகாரம் : சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியவர் கைது
x
குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் பகிர்பவர்கள் குறித்து தகவல்களை போலீசார், சேகரித்து வந்த நிலையில் கோவை பொள்ளாச்சியில் முதல் கைது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. போலீசார், விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த, ரென்டா பசுமாடாரி என்பவரது  செல்போனில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆபாச படங்கள் ஃபேஸ்புக், மெசேஞ்சர் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி மகளிர் போலீசார், போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற, செயல்களில் ஈடுபடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்