தஞ்சாவூர் : மாரியம்மனுக்கு ரூபாய் தாள்களில் அலங்காரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள பாதாள மகா மாரியம்மனுக்கு, புதிய கரன்சி தாள்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள பாதாள மகா மாரியம்மனுக்கு, புதிய கரன்சி தாள்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல், 9 லட்சம் ரூபாய் புதிய 2000, 500, 200, 100, மற்றும் 50 ரூபாய் கரன்ஸி நோட்டுகளால் மகா மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புத்தாண்டு தினமான இன்று புதிய கரன்சி தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story