திருவள்ளூரில் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கிய கார்
திருவள்ளூர் மாவட்டம், சிவன் தாங்கல் அருகே, கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
திருவள்ளூர் மாவட்டம், சிவன் தாங்கல் அருகே, கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்த ஷேர் என்பவர் தனது குடும்பத்துடன்காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும், தடுப்பு சுவரின் ஆரம்ப பகுதி, வாகனங்கள் மேலே ஏறி செல்லும் அளவுக்கு, தாழ்வாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story