மஞ்சளாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - மீன்களை அகற்ற மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் மர்மமான முறையில் மீன்கள் செத்து கிடப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சளாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - மீன்களை அகற்ற மக்கள் கோரிக்கை
x
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் மர்மமான முறையில் மீன்கள் செத்து கிடப்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  மஞ்சளாறு அணையில் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை முதல் அணையின் உட்பகுதியில் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதக்க தொடங்கியுள்ளது. அணையில் இருந்து, சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, நீரை சோதனை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்