ஆழ்துளை கிணறு அமைக்க லஞ்சம் : கிராம நிர்வாக அதிகாரி கைது
திருவள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த சீனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விவேக் ரெட்டி தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி குமாரவேல் ஆஜர்படுத்தினார்.
Next Story