"குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மொத்தம் 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 2 -வது வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
Next Story