"முகாமில் ஷவர் குளியல் போடும் யானைகள் - செல்பி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்"

மேட்டுப்பாளையம் அருகே தொடங்கியுள்ள யானைகள் நலவாழ்வு முகாமில், பயண களைப்பை போக்க யானைகள போடும் ஷவர் குளியல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
x
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில்  கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. முகாமை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து யானைகள் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு வந்து சேர்ந்தன.

யானைகள் அனைத்தும் பல கிலோமீட்டர் லாரிகளில் வந்ததால்  ஏற்பட்ட பயண க்கலைப்பை போக்க குளிக்க வைக்கப்பட்டன. மணிக்கணக்கில் ஷவரில்  ஆனந்த குளியல் போடும் யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி நடைபயிற்சியும் வழங்கப்பட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்