"உறுதித்தன்மையை இழந்து நிற்கும் பாலம் - பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை"

உறுதி தன்மையை இழந்து நிற்கும் பழமையான பாலத்தை செப்பனிட்டு தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சியில் உள்ள நரசிம்ம மங்கலத்தையும்  கல்லுக்குழியையும் இணைக்கும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. கல்லுக்குழி, மாணிக்கபுரம், இணாம், சமயபுரம், ஒத்தக்கடை, இருங்களூர், புரத்தாக்குடி உள்ளிட்ட  கிராமங்களுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பாலம், சுமார் ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அன்றாட பள்ளி, கல்லூரி பேருந்துகள் உட்பட அரசு பல்வேறு வாகனங்கள் செல்லும் இந்த பாலம் உறுதித்தன்மை இன்றி
பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர், அப்பகுதி மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்