"தமிழுக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசு ஆதரவு உண்டு" - அமைச்சர் ஈஸ்வரன்
"சங்கீத நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்தை வலுப்படுத்தும்"
தமிழ் மொழிக்கும் , கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்று அந்நாட்டு தொடர்பு தகவல் அமைச்சர் அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் மார்கழி மாத இசை நிகழ்சி துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். கர்நாடக இசை கலைஞர்கள் அருணா சாய்ராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், சங்கீத நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.
Next Story