போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை
x
சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை  போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில்  தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி அடையாள அட்டைகள் மூலம் துணிக்கடை , வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் தவணை முறையில் பொருட்களைப் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள்  சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்