வேட்புமனு தாக்கல் செய்த அ.ம.மு.க. பிரமுகர் கைது - கைதை தட்டிக்கேட்ட மனைவிக்கு காயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரங்குளம் கிராமத்தை சேர்ந்த அமமுக பிரமுகர் போஸ் என்ற விஜயகுமார், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், இவரது மனைவி சுமதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரங்குளம் கிராமத்தை சேர்ந்த அமமுக பிரமுகர் போஸ் என்ற விஜயகுமார், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், இவரது மனைவி சுமதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் விஜய்குமாரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது விஜய்குமாரின் மனைவி சுமதி தனது கணவரை கைது செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் சுமதியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுமதி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story