"தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுகிறது" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்

புதிய தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு வழங்க தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயாராக உள்ளது துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுகிறது - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்
x
புதிய தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு வழங்க தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயாராக உள்ளது துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம், 43 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அவர் கூறினார். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பல, தமிழகத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்த பன்னீர்செல்வம், மின் பேருந்து கொள்கையையும் அரசு வெளியிட்டுள்ளது என்றார். தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்