ஆண்டிப்பட்டி : 58ஆம் கால்வாயில் திடீர் உடைப்பு - விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்

ஆண்டிப்பட்டி அருகே 58-ம் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி : 58ஆம் கால்வாயில் திடீர் உடைப்பு - விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்
x
ஆண்டிப்பட்டி அருகே 58-ம் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். உசிலம்பட்டி விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய்க்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி ஒரு நாள் மட்டுமே விவசாயிகளுக்கு நீடித்தது. ஆண்டிபட்டி அருகே புதூர் பகுதியில், 2-வது முறையாக பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அப்பகுதியில் மட்டும் சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 58ஆம் கால்வாயில் தண்ணீர் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த உசிலம்பட்டி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்