"சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது" - நித்தியானந்தா

குஜராத் ஆசிரமம் மூடல், ஆசிரம நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு என அடுத்தடுத்த சூறாவளிகள் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் தன் பேச்சால் கவனம் ஈர்த்திருக்கிறார் நித்தியானந்தா
சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது - நித்தியானந்தா
x
சர்ச்சை, சலசலப்பு என எதுக்கும் அஞ்சாமல் சத்சங்கம் என்ற ஒன்றில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நித்தியானந்தா. 

சரியாக 7 மணிக்கு ஆன்லைனில் ஆஜராகும் நித்தி இதுநாள் வரை தியான வகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது தன்னை விமர்சிப்பவர்களை பற்றியும் பேசி கலகலப்பூட்டி வருகிறார். 

இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் தான் இதுபோல் கூலாக இருக்க காரணம் என்ன என்றும் அவர் விளக்குகிறார்.

என்னை எல்லாம் யாரும் எப்போதும் பயமுறுத்த முடியாது நேரடியாக சவால் விடும் நித்தி, தான் யார் என்பது குறித்தும் கலகலப்பாக பேசியிருக்கிறார்.

நித்தி மீதான புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் இணையதளத்தை பக்கத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையும் தன் பாணியிலேயே பாயிண்ட் வைத்து பேசியிருக்கிறார் நித்தி.

கைலாசா என்ற நாட்டிற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கும் நித்தி, பாஸ்போர்ட், அமைச்சரவை என ஒரு பக்கம் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ஆன்லைனில் மணிக்கணக்கில் பேசி அசத்தி வருகிறார்.

எல்லாம் ஓகே... ஆனால் தான் எங்கே இருக்கிறேன் என்ற ஒரு கேள்விக்கு அவர் பதில் தருவாரா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது... 



Next Story

மேலும் செய்திகள்