திருவாரூர் : மழையால் சுவர் இடிந்து ஒரே நாளில் 2 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான செல்லையன் நேற்றிரவு அவரது கூரை விட்டில் உறங்கியுள்ளார்.
திருவாரூர் : மழையால் சுவர் இடிந்து ஒரே நாளில் 2 பேர் பலி
x
திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான செல்லையன் நேற்றிரவு அவரது கூரை விட்டில் உறங்கியுள்ளார். இன்று காலை அவரது பேத்தி உமா வந்து பார்த்த போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செல்லையன் பலியானது தெரியவந்தது. தகவலறிந்த  கொரடாச்சேரி போலீசார்  உடலை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு  அனுப்பி வைத்தனர். இதேபோல்  செட்டிசிமிலி கிராமத்தை சேர்ந்த 49 வயதான பக்கிரிசாமி, அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்