சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் : வீட்டின் உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.
சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் : வீட்டின் உரிமையாளர் கைது
x
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர். கோவை மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட்டில் கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் மீது விபத்து ஏற்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்