மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது.
மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி
x
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க சேலம்  தாரமங்கலம் பகுதியை மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளை டூர் ஜெட் விமானத்தில்  இலவசமாக சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தனர். சென்னை வந்த 40 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குநர் ரவீந்தர்நாத் சிங் பூ, இனிப்புகளை வழங்கினார். பின்னர் மாநகர பஸ்சில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதன்முறையாக விமானத்தில் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக மாற்றுதிறனாளிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்