17 பேர் உயிரிழந்த சம்பவம் - தொடரும் போராட்டம்
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விபத்துக்கு காரணமாக வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்தவர்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story