அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் : நோயாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது.
அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் : நோயாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
x
பெரம்பலூர்  மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. அங்கு பெய்த தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரை புரண்டு ஓடும் வெள்ள நீரால் பூமிதானம், மலையாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்