ரூ.15 லட்சம் வங்கி கடன் மோசடி வழக்கு : தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
வங்கி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வங்கி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராயபுரம் இந்தியன் வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது தொடர்பான வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆஜரான தொழிலதிபர் ஜி.வி.கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Next Story

