நீட் வழக்கு : மாணவருக்கு முன்ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நீட் வழக்கு : மாணவருக்கு முன்ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி
x
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் தினமும் காலை 10.30 மணிக்கு  மதுரை சிபிசிஐடி  அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மாணவரின்  தந்தை ரவிக்குமார் வரும் செவ்வாய்கிழமை காலை சிபிசிஐடி விசாரணை அதிகாரி  முன் சரணடைய வேண்டும் என்றும் 60 நாட்களுக்கு அவர் ஜாமின்  கோரி விண்ணப்பிக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்