லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ
x
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெள்ளக் கோவில் சோதனைச் சாவடியில் நிற்கும் காவலர் இருளாண்டி, இரு சக்கர வாகனங்களில் வருவோரை மறித்து, ஏகப்பட்ட கேள்விகளை அடுக்குகிறார். இதைத் தொடர்ந்து, நீண்ட நேரத்துக்கு பிறகு ஒருவர் பணம் கொடுக்கிறார். அதை வாங்கும் இருளாண்டி தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சாலையில் வரும் மற்றவரை மறித்து வசூல்வேட்டைக்காக அழைத்துச் செல்லும் இருளாண்டியின், வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து,  அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர் அதிகாரி இருந்திருந்தால், வேறுமாதிரி கணக்கு செய்திருப்பார் என அவர் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்