சென்னையில் முகமூடி அணிந்து இரவு நேரத்தில் வீடுகளில் கொள்ளை
சென்னை போரூரை அடுத்த சமயபுரத்தில் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டி வரும் முகமூடி திருடனை விரைந்து பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரூரை அடுத்த சமயபுரத்தில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த கொள்ளையன் மதில் சுவரேறி குதித்து வீடுகளில் கைவரிசை காட்டி வருவது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. முகத்தை மூடியபடி, கை மற்றும் கால்களில் உறைகள் அணிந்து தடயம் ஏதும் பதியாமல் இருக்கும் வகையில் இரவு நேரங்களில் நடமாடும் அந்த கொள்ளையனை
கண்டு அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story