சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை பரங்கிமலையில் போக்குவரத்து விழிப்புணர்வுக்காக வாகன ஓட்டிகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் மரக்கன்றுகளை பரிசளித்தனர்.
சென்னை பரங்கிமலையில் போக்குவரத்து விழிப்புணர்வுக்காக வாகன ஓட்டிகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் மரக்கன்றுகளை பரிசளித்தனர். பட்ரோட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாலையில் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு சாலைவிதி குறித்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. அதேபோல ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு குழந்தைகளின் கையால் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
Next Story